Saturday, April 17, 2010

350 ன்னா என்னண்ணே...

அண்ணே.. அண்ணே... எனக்கொரு சந்தேகண்ணே

டே பனங்கொட்ட தலையா.. நேத்து நைட்டு வந்து குடுகுடுப்பை அடிச்சிட்டுப் போனானே சாமுப் பய அவனயே நான் எப்டி அடிக்கறதுன்னு தெரியாம யோசிச்சிகிட்டு இருக்கேன்.. படுவா குருக்க வந்த குறுக்கால வெட்டிப் புடுவேன்..

அதாண்ணே எனக்கும் சந்தேகம்... அவன் அப்படி என்னண்ணே சொல்றான்.... எனக்கு ஒண்ணுமே புரியலையே.. வெளக்கமா சொல்லுங்கண்ணே..

ஆக்ங்... வெளக்கமா சொன்னா மட்டும் வெளங்கிடும்.. ஏண்டா மண்டைய இப்படி கடிச்சுக் கொதறி வெச்சுருக்கியே, அதுல இங்கியாவது, இங்கியாவது, இங்கியாவது மூளைன்னு ஒண்ணு வெச்சுருக்கியா...? சேரி.. உனக்கு எது வெளங்கள...? இந்த சாமுப் பய பதிவு எழுதுனாலும் சரி, பின்னூட்டம் போட்டாலும் சரி... அவனவனுக்கு கண்ணக் கட்டும்.. ஒனக்கு புரியற மாறி பூசியும் பூசாமலும், டிங்கரிங் பண்ணியும் பண்ணாமலும் சொல்லறேன்..

இந்த 350,.. 350ன்னு ஏதோ சொல்லீட்டு திரியுரானே அப்டீன்னா என்னன்னே....?

ஐயோ....இந்த வெளங்காத சாமுப்பய... நடு ராத்திரி, நாய் நரியை எல்லாம் எழுப்பி விட்டு, குடுகுடுப்பய அடிச்சிட்டு என்னத்தையோ ஒளரீட்டு ஒடீரறான்.. இங்க ஒண்ணு பகல் நேரத்துல ஏன் வாயக் கிண்டீட்டு இருக்குது..டேய் சாமு... பகல்ல ஒரு நாள் எங்கிட்ட சிக்காமலா போய்டுவ..

சொல்லுங்கண்ணே..

டேய்.. டெய்லி காலைல அண்ணி கையால ஓசி டீ வாங்கி குடிக்கிறியே.... எப்புடி இருக்கு...?

இப்பெல்லாம் அண்ணி முன்ன மாறி இல்லண்ணே.. டீ சரியில்லண்ணே.. வாயிலியே வெக்க முடியலைன்னே.. டீத்துளு ரொம்ப போடராங்கண்ணே..

அடே கொஞ்சம் டீத்துளு அதிகமா போட்டாலே உன் வாய்க்கே அது புடிக்க மாட்டேங்குது.. நாம டெய்லி சுவாசிக்கிறோமே காத்து, அதுல டீத்துளு மாறி ஒரு பொருளு அதிகமாகீட்டே வருதாமா... கூடிய சீக்கிரம் மூக்குல ஆக்சிஜன் சிலிண்டர் வெச்சுட்டு திரிய வேண்டியது தான்.. இப்பவே நீ கடல் பண்ணி மாறி இருக்க... அதையும் மாட்டீட்டியின்னா தும்பிக்க வெச்ச யான மாறி ஆயிடுவ..

வெளையாடாதீங்கண்ணே... அதென்னண்ணே டீத்துளு மாறியே ஒரு பொருளு...?

அதுக்குப் பேருதாண்டா கார்பன் டை ஆக்சைடு.. அதாவது கரியமிலவாயு... ஐயோ... இவனுக்கு எப்பிடி நான் முழுசையும் சொல்லிப் புரிய வெக்கப் போறேன்.. எங்கடா போய்த் தொலஞ்சான் இந்த சாமு..

அண்ணே.. கரியமிலவாயு.. ஐ.. நான் ஏழாம் வகுப்பு பாசாகும்போது படிச்சது...

டேய்.. மகனே வேண்டாம்.. மீண்டும் மீண்டும் சொல்றேன்.. நான் SSLC பெயில் ஆனத குத்திக் காட்டுறியா படுவா....

மேல சொல்லுங்கண்ணே..

டீத்துள அளந்து போட ஸ்பூனு யூஸ் பன்றோமே அது மாறி காத்துல இருக்குற இந்த கரியமில வாயுவையும் அளக்கராங்கப்பா... அதுக்குப் பேரு ppm.. அதாவது parts per million. ஏதாவது புரியுதா..? நீ எச்சுகேடேட் பாமிலி தானே..?

ஆமா.. நா ஒரு பேமானி தான்..

அது தான் தெரியுமே.. இந்த டப்பாத் தலையன் தொல்ல தாங்க முடியல.. என்ன டென்சன் பண்றான்... டென்சன். டென்சன். டென்சன்...

லெஸ் டென்சன் மோர் வொர்க்.. மோர் வொர்க்.. லெஸ் டென்சன்.. மேல சொல்லுங்க பாஸ்...

டேய்.... வடக்குப் பட்டி ராமசாமி செத்தப்பக் கூட நான் இவ்வளவு கவலைப் படலடா.. ஆனா நீ இந்த மாறி கேள்வி மேல கேள்வி கேட்டுக் கொடயர பாரு.. சரி கேட்டுக்க நாயே..
இந்த கார்பன்டைஆக்சைடு காத்துல இப்ப கிட்டத்தட்ட 390 ppm இருக்கு... அதாவது... உங்கண்ணி இப்ப குடுக்குற காப்பி மாறி...டெய்லி இதோட அளவு கூடீட்டே போகுதுடா..

இப்படியே போச்சுன்னா என்னண்ணே ஆகும்...?

சங்க ஊதக் கூட ஆளு இருக்கதுடீ அடியே.. மொத்தமா சாகப் போறோம்... செத்தா நீயே போய் குழிக்குள்ள படுத்துக்க வேண்டியதுதான்... இன்னும் கொஞ்ச தூரம் தான்..430.. 440... 450.. சங்கு.. ஊ ....ஊ....

ஏண்ணே.. கையக் கொஞ்சம் நீட்டுங்க.. இந்தாங்க.. இந்த ஓட்ட காலணாவ வெச்சு ஒண்ணும் பண்ண முடியாதா...?

பாருங்க மகாஜனங்களே.. இந்த ஒன்றரையணா ஓட்டக் காலணாவ வெச்சுட்டு ஓசோன் ஓட்டையவே ஒட்ட வெக்கப் பாக்குறான்.... ஆனா நீ பரவால்லடா.. ஏதாவது செய்யணும்னு தோணுதே.... நாட்டுல பல பேரு இதக் கண்டும் காணாம இருக்கானுகப்பா..

அப்ப எவ்வளவுதாண்ணே கார்பன்டைஆக்சைடு இருக்கணும்...?

350 ppm... உனக்குப் புரியற மாறி சொல்லனும்னா..கிட்ட வா.. காதைக் காட்டு... போன வாரம் ட்ரான்ஸ்பார் வாங்கீட்டுப் போனாங்களே டீச்சரம்மா.. அவங்க போடற காப்பி மாதிரி.. அளவான டீத்துளு... டேய்.. நீ இளிக்கும்போதே தெரியுது.. எல்லா எடத்துலயும் ஓசி டீ வாங்கி இந்த பான வயித்துக்குள்ள ஊத்தியிருக்க...

அப்ப நாம அதைத் தாண்டீட்டோமா அண்ணே...?அப்டீன்னா இந்த உலகத்தைக் காப்பாத்த யாருமே இல்லையா...?

இதுக்குதாண்டா ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேனுங்கறது..ஊருக்குள்ள நெறைய பேரு இதப் பத்தி சொல்லீட்டு தான் இருக்கானுங்க.. செஞ்சிக்கிட்டும் இருக்கானுங்க.. ஆனா ஒருத்தன் இங்க கஷ்டப்பட்டு ஒரு மரம் நட்டு வெச்சா..இன்னொருத்தன் இன்னொரு பக்கத்துல பொகைய உட்டுக்கிட்டே வண்டிய ஓட்ரான்....ஒருத்தன் இங்க தண்ணிய ஊத்துனா.. அங்க ரொம்பபேரு காட்டையே அழிச்சிகிட்டு இருக்கானுங்க... எல்லாரும் சேந்து திருந்துனா தான் வேலை ஆகும்... ஆனா இவனுகள திருத்துறது ஏன் வேலை இல்ல.. மொதல்ல என்ன நான் திருத்திக்கறேன்...

இப்ப நான் என்னண்ணே பண்றது...

ஆங்.. நான் சொன்ன இதே விஷயத்த தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வெச்சு.. கூடயே நீயும் ஒக்காந்துக்க... அடப்போடா.. நாட்டுல ரொம்பப் பேருக்கு இது தெரியும்.. அத மத்தவங்க கிட்ட சொன்னாலே போதும்.. இந்த குடுகுடுப்பக்காரன் ஏதோ லிங்க் கொடுத்தானே... ஆங்...

http://www.350.org/about/science

இதப் போய்ப் பாரு.. உன் மண்டைக்கு ஏதாவது ஏறுதான்னு...

லிங்க் குடுத்துடீங்கண்ணே... அப்படியே இன்னொன்னும் குடுத்தீங்கன்னா....

என்னடா வண்டுருட்டாந்தலையா...?

அதுதாண்ணே.. அந்த டீச்ச்சரம்மாவோட அட்ரசு... வ்லாசம் வ்லாசம்...

அடேய்.. என்ன என்னடா நெனச்சே... இர்ரா மகனே இன்னிக்கு உன்ன எங்கோ ஓடனாலும் வெட்டாம உடமாட்டேன்..இர்ரா டேய்....